செய்திகள்

திண்டிவனம் அருகே அரசுபஸ் மோதி முதியவர் பலி

Published On 2018-05-24 16:44 IST   |   Update On 2018-05-24 16:44:00 IST
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசு பஸ் மோதியதில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ் இன்று காலை 6 மணி அளவில் திண்டிவனம் அருகே புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது 60 வயது மதிக்க தக்க முதியவர் ஒருவர் சைக்கிளில் கீரைக்கட்டுகளை ஏற்றிக்கொண்டு அங்குள்ள வளைவில் திரும்பினார். அப்போது அவர் மீது அரசு பஸ் மோதியது.

இதில் முதியவர் உடல்நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு விபத்தில் இறந்தவர் யார்? எந்த ஊர்? என விசாரணை நடத்திவருகிறார்கள்.
Tags:    

Similar News