செய்திகள்

ஒட்டன்சத்திரம் பகுதியில் பலத்த மழை

Published On 2018-05-24 10:26 GMT   |   Update On 2018-05-24 10:26 GMT
ஒட்டன்சத்திரம் பகுதியில் பலத்த மழை பெய்த தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சி நீடித்தது. எனவே எப்போது மழை பெய்யும் என மக்கள் கவலையில் இருந்தனர். மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியில் தமிழகத்திலேயே மிகப் பெரிய காய்கறி சந்தை உள்ளது.

இந்த சந்தையை சுற்றி ஏராளமான விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர். பருவ மழை பொய்த்துப் போனதால் விவசாயத்தில் எதுவும் கிடைக்காததால் வறுமையில் வாடினர். இந்த ஆண்டு ஓரளவு கிணற்றில் நீர் இருப்பு உள்ளது. அதுவும் போதுமானதாக இல்லை.

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தாலும் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் மழை தூறல் எட்டிப்பார்க்கவில்லை. நேற்று மாலை கரு மேகங்கள் சூழ்ந்தது. பின்னர் திடீரென ஒட்டன்சத்திரம் பகுதியில் பலத்த மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரம் இந்த மழை பெய்ததால் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

அதோடு ஓரளவு வெப்ப மும் குறைந்துள்ளது. இதே போல ஒட்டன் சத்திரம் பகுதியை சுற்றியுள்ள விருப்பாட்சி, அத்திக் கோம்பை, வடகாடு, சாலைப்புதூர், கேதையறும்பு, அம்பிளிக்கை, கரியாம்பட்டி, கள்ளிமந்தயம், காவேரியம்மாபட்டி பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கொடைக்கானலிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குதூகலித்தனர்.

Tags:    

Similar News