செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

Published On 2018-05-23 11:22 GMT   |   Update On 2018-05-23 11:22 GMT
கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசரணை நடத்தி வருகிறார்கள்.

மண்ணச்சநல்லூர்,

மே 23-

கொள்ளிடம் ஆற்றில் அடை யாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.மண்ணச்சநல்லூர் வட்டம் மான்பிடிமங்கலம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரி அருகில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று நேற்று கிடந்தது. ஐந்தரை அடி உயரத்தில் மாநிறமான அந்த நபர் கருப்பு, சிவப்பு கட்டம் போட்ட சாரம் (லுங்கி) மட்டும் அணிந்திருந்தார். அவர் யார்? எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை.இது குறித்து மாதவ பெருமாள் கோயில் கிராம நிர்வாக அலுவலர் கணேசன் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சார்பு ஆய்வாளர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யாரென்றும், அவர் எதனால் இறந்தார் என்றும் விசாரணை நடத்தி வருகிறார். போ லீசார் முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News