செய்திகள்

வத்தலக்குண்டு அருகே கோவில் திருவிழாவில் பயங்கர கோஷ்டி மோதல்

Published On 2018-05-19 22:42 IST   |   Update On 2018-05-19 22:42:00 IST
வத்தலக்குண்டு அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டுவில் மகாபரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவில் நேற்று ஒரு தரப்பினர் வண்டி வேசம் ஊர்வலமாக வந்தனர். அப்போது அங்கிருந்த வாகனங்கள் மீது கல் வீசி தாக்கப்பட்டது.

இதனால் இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டதில் திருவிழாவில் பங்கேற்ற ஒருவரின் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. அவ்வழியாக வந்த அரசு பஸ் கல் வீசி தாக்கப்பட்டதால் குள்ளபுரம், ஏ.வாடிப்பட்டி பகுதியில் இருந்து வத்தலக்குண்டு நகருக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த தண்ணீர் பந்தலுக்கும் தீ வைத்து எரித்தனர். இதனால் நேற்று சுவாமியின் முத்துப் பல்லக்கு ஊர்வலம் சிறிது நேரத்தில் முடிந்தது. இன்று தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொடைக்கானலில் முதல்வர் பாதுகாப்புக்கு பெரும்பாலான போலீசார் சென்று விட்டதால் குறைந்த அளவு போலீசாரே உள்ளனர். எனவே இன்று மீண்டும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை சமாளிக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News