செய்திகள்

மதுரை அருகே மினிபஸ் டிரைவருக்கு அடி-உதை: 3 பேர் கைது

Published On 2018-05-18 20:57 IST   |   Update On 2018-05-18 20:57:00 IST
மதுரை அருகே பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் மினி பஸ் டிரைவரை அடித்து உதைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டியைச் சேர்ந்தவர் அம்பேத் சந்திரன் (வயது 38). இவர் வாடிப்பட்டியில் இருந்து பூச்சம்பட்டிக்கு மினிபஸ் ஓட்டி வருகிறார்.

நேற்றும் வழக்கம் போல பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற அம்பேத் சந்திரன் கச்சைகட்டியில் உள்ள பெருமாள் கோவில் முன்பு மினிபஸ்சில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ஆட்டோ ஓட்டி வந்த கோபாலகிருஷ்ணன் (28) என்பவருக்கும், அம்பேத் சந்திரனுக்கும் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் தகராறில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கோபால கிருஷ்ணன், அவரது நண்பர் பாலமுருகனும் சேர்ந்து அம்பேத் சந்திரனை தாக்கினர்.

மேலும் அம்பேத் சந்திரன், அவரது நண்பர்கள் கோபிராஜ், செந்தில் ஆகியோர் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

இது குறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணன், பாலமுருகன், கோபிராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான அம்பேத் சந்திரன், செந்தில் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News