செய்திகள்
எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை - பா.ஜனதா மேலிடத்துக்கு தமிழிசை பரிந்துரை
பெண் பத்திரிகையாளர்களை இழிவாக விமர்சனம் செய்த எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #SVeShekher #TamilisaiSoundararajan
சென்னை:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் கவர்னருக்கு எதிரான கருத்தை அந்த பெண் நிருபர் வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஸ்.வி.சேகர்பெண் பத்திரிகையாளர்களை இழிவு படுத்தும் வகையில் டுவிட்டரில் கடும் விமர்சனத்தை பதிவு செய்தார்.
இதுதொடர்பாக கடும் கண்டனம் எழுந்தது. எஸ்.வி. சேகர் மீது போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.வி.சேகரை கைது செய்ய போலீசார் முயற்சி எடுத்த நிலையில் அவர் முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட்டை நாடினார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது எஸ்.வி.சேகர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுபற்றி மதுரையில் வந்திருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
எஸ்.வி.சேகர் சமூக வலைதளங்களில் தவறான கருத்தை தெரிவித்து விட்டு அதை நான் எழுதவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மன்னிக்க முடியாத குற்றம்.
சமூக வலைதளத்தில் ஒருமுறை தப்பான கருத்தை கூறினாலும், அது பரவிக் கொண்டே தான் இருக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தவறான கருத்துக்களை பரப்பக் கூடாது.
எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம். ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
அமைச்சர்கள், அரசியல்வாதிகள், ஒரு தரப்பையோ, ஒரு சமூகத்தையோ அவமரியாதையாக பேசக்கூடாது.
கர்நாடகாவில் பா. ஜனதா பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். கர்நாடகாவில் காங்கிரஸ் செய்த தில்லுமுல்லு காரணமாக ராஜராஜேஸ்வரி தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மக்களுக்கு பயன் தருபவை. மக்கள் விரும்பாவிட்டால் அந்த திட்டங்கள் நிறுத்தப்படும். கெய்ல் திட்டத்தில் 91 சதவீத வேலை முடிந்துள்ளது. 9 சதவீத வேலை மட்டுமே பாக்கி உள்ளது. இதனை உயர் நீதிமன்றம் நடைமுறைப்படுத்த கூறியும் மக்கள் எதிர்ப்பதால் திட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #SVeShekher #TamilisaiSoundararajan #BJP
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் கவர்னருக்கு எதிரான கருத்தை அந்த பெண் நிருபர் வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஸ்.வி.சேகர்பெண் பத்திரிகையாளர்களை இழிவு படுத்தும் வகையில் டுவிட்டரில் கடும் விமர்சனத்தை பதிவு செய்தார்.
இதுதொடர்பாக கடும் கண்டனம் எழுந்தது. எஸ்.வி. சேகர் மீது போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.வி.சேகரை கைது செய்ய போலீசார் முயற்சி எடுத்த நிலையில் அவர் முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட்டை நாடினார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது எஸ்.வி.சேகர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுபற்றி மதுரையில் வந்திருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
எஸ்.வி.சேகர் சமூக வலைதளங்களில் தவறான கருத்தை தெரிவித்து விட்டு அதை நான் எழுதவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மன்னிக்க முடியாத குற்றம்.
சமூக வலைதளத்தில் ஒருமுறை தப்பான கருத்தை கூறினாலும், அது பரவிக் கொண்டே தான் இருக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தவறான கருத்துக்களை பரப்பக் கூடாது.
எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம். ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
அமைச்சர்கள், அரசியல்வாதிகள், ஒரு தரப்பையோ, ஒரு சமூகத்தையோ அவமரியாதையாக பேசக்கூடாது.
கர்நாடகாவில் பா. ஜனதா பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். கர்நாடகாவில் காங்கிரஸ் செய்த தில்லுமுல்லு காரணமாக ராஜராஜேஸ்வரி தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மக்களுக்கு பயன் தருபவை. மக்கள் விரும்பாவிட்டால் அந்த திட்டங்கள் நிறுத்தப்படும். கெய்ல் திட்டத்தில் 91 சதவீத வேலை முடிந்துள்ளது. 9 சதவீத வேலை மட்டுமே பாக்கி உள்ளது. இதனை உயர் நீதிமன்றம் நடைமுறைப்படுத்த கூறியும் மக்கள் எதிர்ப்பதால் திட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #SVeShekher #TamilisaiSoundararajan #BJP