செய்திகள்

செவ்வாப்பேட்டை அருகே வாலிபர் மர்ம மரணம்

Published On 2018-05-10 09:31 GMT   |   Update On 2018-05-10 09:31 GMT
செவ்வாப்பேட்டை அருகே மர்மமான முறையில் உயிரிழந்த வாலிபர் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செவ்வாப்பேட்டை:

செவ்வாப்பேட்டை அடுத்த அரண்வாயல் அருகே பூந்தமல்லி-திருப்பதி நெடுஞ்சாலை ஓரத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தது. போலீசார் அங்கு வந்து பார்த்த போது வாலிபர் உடல் அருகே வி‌ஷ பாட்டில்கள் 5-க்கு மேற்பட்டவை மற்றும் மது பாட்டில்கள் இருந்தது.

அவரது சட்டை பையில் இருந்த ஓட்டுனர் உரிமத்தை ஆய்வு செய்த போது பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பது தெரிய வந்தது. இது பற்றி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜெயக்குமாரை யாரேனும் கொலை செய்து சடலத்தை வீசி சென்றனரா அல்லது காதல் தோல்வியால் அவரே வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News