செய்திகள்
ஈரோடு பஸ் நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது
ஈரோடு பஸ் நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் ஈரோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு 2 பேர் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் 2 பேரும் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் ஜோசப் தோட்டத்தை சேர்ந்த ஷேக் அலாவுதீன் (35), நசியனூர் வெட்டுக்காட்டுவலசை சேர்ந்த செல்வராஜ் (35) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் ஒரு செல்போன் வைத்திருந்தனர். அது பற்றி விசாரித்த போது அந்த செல்போன் பஸ் பயணி ஒருவரிடம் கூட்டத்தை பயன்படுத்தி பறித்தது என்று கூறினர்.
இதையடுத்து அந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார் ஷேக் அலாவுதீன், செல்வராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் இதுபோல வேறு யாரிடமும் செல்போன் திருடி உள்ளனரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.