செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 13-ந் தேதி பவானி வருகை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பவானிக்கு 13-ந் தேதி வருகை தருகிறார். இதை முன்னிட்டு கால்கோள் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஈரோடு:
பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 13-ந் தேதி நடக்கிறது. விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பவானி வருகிறார். இதை முன்னிட்டு கால்கோள் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு கால்கோள் நாட்டி மேடை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர், அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 13-ந் தேதி பவானி வருகிறார் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிற ஆண்டு விழாவில் அவர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். பின்னர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, விலையில்லா தையல் எந்திரங்கள், விலையில்லா சலவைப்பெட்டி, விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண்கருவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் எனது (அமைச்சர் கே.சி.கருப்பணன்) முன்னிலையில் முதல்-அமைச்சர் வழங்க உள்ளார். தொடர்ந்து முதல்-அமைச்சர் காலிங்கராயன் மணிமண்டபத்தினை திறந்து வைக்க உள்ளார்.
மேலும் விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்ட துறை அமைச்சர் வெ.சரோஜா, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
எம்.பி.க்கள் எஸ்.செல்வகுமாரசின்னையன் (ஈரோடு), சத்யபாமாவாசு(திருப்பூர்), சி.கோபாலகிருஷ்ணன் (நீலகிரி), எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம்(ஈரோடு மேற்கு), தோப்பு என்.டி.வெங்கடாசலம்(பெருந்துறை), கே.எஸ்.தென்னரசு(ஈரோடு கிழக்கு), வி.பி.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா(அந்தியூர்), எஸ்.ஈஸ்வரன்(பவானிசாகர்), உ.தனியரசு (காங்கேயம்) ஆகியோர் பேசுகிறார்கள்.
இவ்வாறு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
முன்னதாக நடந்த கால்கோள் நாட்டும் நிகழ்ச்சியில் பவானி நகர அ.தி.மு.க. செயலாளர் என்.கிருஷ்ணராஜ், ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் அணி துணை செயலாளர் ஏ.சி.முத்துசாமி, மாவட்ட அச்சுக்கூட தலைவர் சித்தையன், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 13-ந் தேதி நடக்கிறது. விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பவானி வருகிறார். இதை முன்னிட்டு கால்கோள் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு கால்கோள் நாட்டி மேடை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர், அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 13-ந் தேதி பவானி வருகிறார் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிற ஆண்டு விழாவில் அவர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். பின்னர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, விலையில்லா தையல் எந்திரங்கள், விலையில்லா சலவைப்பெட்டி, விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண்கருவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் எனது (அமைச்சர் கே.சி.கருப்பணன்) முன்னிலையில் முதல்-அமைச்சர் வழங்க உள்ளார். தொடர்ந்து முதல்-அமைச்சர் காலிங்கராயன் மணிமண்டபத்தினை திறந்து வைக்க உள்ளார்.
மேலும் விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்ட துறை அமைச்சர் வெ.சரோஜா, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
எம்.பி.க்கள் எஸ்.செல்வகுமாரசின்னையன் (ஈரோடு), சத்யபாமாவாசு(திருப்பூர்), சி.கோபாலகிருஷ்ணன் (நீலகிரி), எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம்(ஈரோடு மேற்கு), தோப்பு என்.டி.வெங்கடாசலம்(பெருந்துறை), கே.எஸ்.தென்னரசு(ஈரோடு கிழக்கு), வி.பி.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா(அந்தியூர்), எஸ்.ஈஸ்வரன்(பவானிசாகர்), உ.தனியரசு (காங்கேயம்) ஆகியோர் பேசுகிறார்கள்.
இவ்வாறு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
முன்னதாக நடந்த கால்கோள் நாட்டும் நிகழ்ச்சியில் பவானி நகர அ.தி.மு.க. செயலாளர் என்.கிருஷ்ணராஜ், ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் அணி துணை செயலாளர் ஏ.சி.முத்துசாமி, மாவட்ட அச்சுக்கூட தலைவர் சித்தையன், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.