செய்திகள்

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் இலவசமே - செங்கோட்டையன்

Published On 2018-04-17 04:15 GMT   |   Update On 2018-04-17 04:15 GMT
பள்ளி பாடபுத்தக விலையை கூட்ட பாடநூல் கழகம் முடிவெடுத்துள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

தமிழக அரசின் பாடநூல் கழகம் சார்பில் பள்ளி பாட புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன. இந்நிலையில், பாட புத்தகங்களில் விலையை கூட்ட சமீபத்தில் பாடநூல் கழகம் முடிவெடுத்தது. தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு ஓடாநிலை மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மரியாதை செலுத்தினர்.



அப்போது பாட புத்தகங்கள் விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு புத்தகங்கள் இலவசமாகவே வழங்கப்படும். தனியார் பள்ளிகள் மட்டும் கட்டணம் செலுத்தி புத்தகங்களை வாங்கும் நிலை உள்ளது. அச்சிடும் செலவு அதிகரித்துள்ளதால் பாட புத்தகங்களின் விலை சற்று அதிகரித்துள்ளது” என்று கூறினார். #TamilNews
Tags:    

Similar News