செய்திகள்

காஞ்சீபுரம் அருகே பாலாற்றில் மணல் கடத்திய 3 பேர் கைது

Published On 2018-04-11 06:20 GMT   |   Update On 2018-04-11 06:20 GMT
காஞ்சீபுரம் அருகே பாலாற்றில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் அருகே வளத்தோட்டம் பாலாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக மாநகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமாருக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து அவர் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தெரிய வந்தது.

மணல் கடத்தலில் ஈடுபட்ட குரங்கணி மாவட்டம் பகுதியை சேர்ந்த முருகன், திருவண்ணாமலை மாவட்டம் தூசி பகுதியை சேர்ந்த ஜெயராமன், சக்திவேல் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் உத்திர மேரூர்-காஞ்சீபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவர்களை போலீசார் மறித்தனர். அதில் ஒருவர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். மற்றொருவரை பிடித்தனர். அவர் உத்திரமேரூர் அடுத்த மருதம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரிய வந்தது. மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News