செய்திகள்
ஆர்.எஸ்.மாத்தூர் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி
ஆர்.எஸ்.மாத்தூர் அருகே முதுகுளம் சாலையில் தொழிலாளி தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆர்.எஸ்.மாத்தூர்:
அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் அருகே உள்ள இடையக்குறிச்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது35), தொழிலாளி. இன்று காலை முதுகுளம் சாலையில் தலை நசுங்கிய நிலையில் பாலகிருஷ்ணன் இறந்து கிடந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் தளவாய் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பாலகிருஷ்ணன் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. டிராக்டரில் பயணம் செய்யும் போது தவறி விழுந்ததில், சக்கரத்தில் சிக்கி பலியாகியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அவரை டிராக்டரில் அழைத்து சென்ற நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.