செய்திகள்

அரியலூர் அருகே இளம்பெண் அடித்துக்கொலை- கணவன் வெறிச்செயல்

Published On 2018-04-07 10:21 GMT   |   Update On 2018-04-07 10:21 GMT
அரியலூர் அருகே மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள துளார் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 35). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த சிவகுருநாதன் மகள் முத்துமாரி (30) என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. நதியா, நதி, நதிஷ் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நடராஜன், முத்துமாரியை உருட்டுகட்டையால் சரமாரி தாக்கினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பி னும் சிகிச்சை பலனின்றி இன்று காலை முத்துமாரி இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கூவாகம் போலீசார் கடந்த 3-ந்தேதி நடராஜன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தற்போது முத்துமாரி இறந்து விட்டதால், நடராஜன் மீது கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் இறந்து, தந்தை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது குழந்தைகள் 3 பேரும் நிர்கதியாய் தவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News