செய்திகள்

சிவகங்கை - ராமநாதபுரத்தில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்: அமைச்சர்கள் பங்கேற்பு

Published On 2018-04-03 07:07 GMT   |   Update On 2018-04-03 07:07 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அ.தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். #CauveryManagementBoard

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் அரண்மனை முன்பு இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. தலைமை தாங்கினார். அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்து பேசினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கற்பகம், முருகானந்தம், ராமச்சந்திரன், சந்திரன், பொருளாளர் ரத்தினம், அவைத்தலைவர் காளிதாஸ், நகரச் செயலாளர்கள் ஆனந்தன், ராமச்சந்திரன், பாண்டித்துரை, ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, ராமலிங்கம், தகவல் தொழில் நுட்பப் பிரிவு அமைப்பாளர் கோபி மற்றும் மகளிரணியினர், சார்பு அணியினர், தொண்டர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி பஸ் நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கி பேசினார். ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார்.

உண்ணாவிரதத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், திரளாக கலந்து கொண்டனர்.


ராமநாதபுரத்தில் அ.தி. மு.க. சார்பில் அரண்மனை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அமைச்சர் மணிகண்டன், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், முனியசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் வடக்குமாசி வீதி- மேலமாசி வீதி சந்திப்பில் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, ஏ.கே. போஸ், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #CauveryManagementBoard #CauveryIssue

Tags:    

Similar News