செய்திகள்

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வலியுறுத்தி வக்கீல்கள் போராட்டம்

Published On 2018-03-22 19:49 IST   |   Update On 2018-03-22 19:49:00 IST
அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வலியுறுத்தி வக்கீல்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமரைக்குளம்:

அரியலூரில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து அரியலூர் வக்கீல்கள் சங்கத்தினர் நேற்று கண்ணில் கருப்பு துணி கட்டி நீதிமன்ற வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். போராட்டத்தில், அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் அரசு ஒதுக்கிய நிலத்தில் உடனடியாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உடனடியாக தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என வக்கீல்கள் பேசினர். போராட்டத்தில் திரளான வக்கீல்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கொளஞ்சி நாதன் நன்றி கூறினார். 

Similar News