செய்திகள்
குத்தாலம் அருகே தீக்குளித்து தொழிலாளி தற்கொலை
குத்தாலம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
குத்தாலம்:
குத்தாலம் ரயிலடி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (35) தொழிலாளி. இவரது மனைவி ராதா, உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 11-ம் தேதி சுரேஷ்குமார் மனைவியை தனது வீட்டிற்கு அழைத்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து சுரேஷ்குமார் வீட்டில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டாராம்.
அருகில் இருந்தவர்கள் சுரேஷ்குமாரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். #tamilnews