செய்திகள்

சரியாக படிக்காததால் தாய் கண்டிப்பு: 9-ம் வகுப்பு மாணவி மாயம்

Published On 2018-03-10 18:57 IST   |   Update On 2018-03-10 18:57:00 IST
மகள் சரியாக படிக்காததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றுள்ளார். இது குறித்து போலீசார் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு எம்.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் விஜய சேகர். இவரது மகள் பிரியா (வயது 14). இவர் டீச்சர்ஸ் காலனியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரியா தனது பள்ளி பாடங்களை சரியாக படிக்கவில்லை என தெரிகிறது.

எனவே பிரியாவின் தாயார் கண்டிப்பு செய்தார். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். இரவு 10.30 மணி அளவில் விஜயசேகர் எழுந்து பார்த்தார். அப்போது பிரியாவை காணவில்லை. அக்கம் பக்கம் பிரியாவை தேடி பார்த்தனர்.

உறவினர் வீடுகளுக்கும் சென்று பார்த்தனர். ஆனால் கடந்த 6 நாட்களாக பிரியாவை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்க வில்லை. எனவே பிரியா மாயமானது குறித்து விஜயசேகர் ஈரோடு தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் வழக்குப்பதிவு செய்தார். மாயமான அன்று பிரியா ரோஸ் நிறத்தில் சுடிதார் டாப்பும், புளு நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews

Similar News