செய்திகள்

வேதாரண்யத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

Published On 2018-03-10 16:13 IST   |   Update On 2018-03-10 16:13:00 IST
பெரியார் சிலை குறித்து கருத்து தெரிவித்த எச்.ராஜாவை கண்டித்து வேதாரண்யத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனியூஸ்டு கட்சியினர் திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலையை உடைத்ததற்கும், தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றவேண்டும் என்று கூறிய எச்.ராஜாவை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் முத்துராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் அம்பிகாபதி, விவசாய சங்க ராமச்சந்திரன், செந்தில், விவசாய சங்க தொழிலாளர் அணி வெற்றியழகன் மகளிரணி ஒன்றியச் செயலாளர் வசந்தா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல் தலைஞாயிறு பேருந்து நிலையம் அருகே ஒன்றியச் செயலாளர் வேணு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றியச் செயலாளர் மகேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் முருகையன், மார்க்சிஸ்ட் ஒன்றியக்குழு அலெக்சாண்டர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பேரூர் செயலாளர் இளங்கோவன், விவசாய தொழிலாளர் சங்க சம்பந்தம், மகளிரணி ஒன்றிய செயலாளர் செல்வி மாணவர் பெருமன்றம் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #tamilnews

Similar News