செய்திகள்

சிவகங்கையில் கடன் தகராறில் தொழிலாளி மீது தாக்குதல்- 3 பேர் கைது

Published On 2018-03-10 15:46 IST   |   Update On 2018-03-10 15:46:00 IST
கடன் தகராறில் தொழிலாளியை தாக்கியதாக மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை:

சிவகங்கை நகர் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் சேதுராமன் (வயது 44). இவர், சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரப்பனிடம் ரூ. 15 ஆயிரம் கடன் வாங்கினார்.

இந்த பணத்தை பல ஆண்டுகளாக திருப்பிக் கொடுக்காததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று சந்திரப்பன் பணம் கேட்டபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரப்பன், செந்தில் குமார், பிரவீன் குமார், அறிவுக்கரசு, ரெவன்ராஜ் ஆகியோர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து சேதுராமனை தாக்கினர்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சிவகங்கை நகர் போலீசில் சேதுராமன் கொடுத்த புகாரின் பேரில் துணை சூப்பிரண்டு மங்களேசுவரன் விசாரணை நடத்தி, சந்திரப்பன், பிரவீன்குமார், ரெவன்ராஜ் ஆகியோரை கைது செய்தார்.

பிரவீன்குமார் என்ஜினீயரிங் கல்லூரியிலும் ரெவன்ராஜ் பாலிடெக்னிக்கிலும் படித்து வரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

Similar News