செய்திகள்

கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

Published On 2018-01-30 19:20 IST   |   Update On 2018-01-30 19:20:00 IST
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தாமரைக்குளம்:

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரியலூரிலும் அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து ஜனவரி 24-ந் தேதி முதல் கல்லூரி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, நேற்று மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தி மீண்டும் வகுப்புகளை புறக்கணித்தனர். மேலும் அரியலூரின் முக்கிய சாலைகள் வழியாக பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews

Similar News