செய்திகள்

மேடவாக்கம் அருகே லாரி மோதி வாலிபர் பலி

Published On 2018-01-28 13:58 IST   |   Update On 2018-01-28 13:58:00 IST
மேடவாக்கம் அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

மேடவாக்கத்தை அடுத்த சித்தலப்பாக்கத்தை சேர்ந்தவர் ஆஷிப் பாஷா (வயது 27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் தாம்பரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தார். காமராஜபுரம், வேளச்சேரி மெயின் ரோட்டில் சிக்னல் அருகே வந்த போது அங்கு நின்ற லாரியை டிரைவர் பின் நோக்கி இயக்கினார்.

அப்போது ஆஷிப் பாஷா வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இன்று காலை ஆஷிப் பாஷா பரிதாபமாக இறந்தார். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கண்ணகி நகரை சேர்ந்த குமாரை கைது செய்தனர்.

Similar News