செய்திகள்
மதுவை விற்கும் அரசு திருடன் தான்: கமல்ஹாசன்
தரமான கல்வி, சுகாதாரம் வழங்குவதே அரசின் கடமை, மதுவை விற்கும் அரசு திருடன் தான் என்று மாணவர்கள் மத்திய கமல்ஹாசன் பேசியிருப்பது அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாம்பரம்:
நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அதற்காக மாணவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு செய்தார். முதல் கட்டமாக அவர் தாம்பரத்தில் சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
மாணவர்கள் மத்தியில் பேசும் போது எனக்கு தைரியம் அதிகரிக்கிறது. நான் இங்கு தலைவனாகவோ, அரசியலுக்கு வருகிறேன் என்றோ கூறவரவில்லை. நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் என்று அழைக்க வந்துள்ளேன்.
நாட்டு நடப்பை பார்க்க தொடங்குங்கள். அது உங்களின் கடமை. நான் தனியாக நிற்க மாட்டேன். நீங்கள் தான் நான். நாடு, படிப்பு, கல்வி கெட்டுப்போய் விட்டது என்று பேசுவதோடு நிற்கக்கூடாது. தவறை இன்றே சரி செய்ய வேண்டும்.
தரமான கல்வி, சுகாதாரம் வழங்குவதே அரசின் கடமை மதுவை விற்கும் அரசு திருடன் தான். அரசியல்வாதிகள் ஏழ்மையை ஒழிப்பதாக உறுதியளித்தனர். ஆனால் அவர்களின் ஏழ்மையைத் தான் ஒழித்தனர். சுவிட்சர்லாந்து வங்கி கணக்கில் பணத்தை பதுக்கியுள்ளனர். மக்களின் ஏழ்மை அகற்றப்படவில்லை.
மனஓட்டம், உருவ அமைப்பு, பேச்சுத்திறனை வைத்து அரசியல் வாதியை எடைபோடக்கூடாது. நாட்டை கொள்ளையடிப்பவர்களை அடையாளம் காண தெரிந்து கொள்ளுங்கள்.
அமைதியாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய காந்தி எனக்கு பிடித்த தலைவர். காமராஜர், பெரியார், எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோரையும் எனக்கு பிடிக்கும். இன்னும் பலரை பிடிக்கும். அதுபற்றி கூறினால் அரசியலாகி விடும்.
நான் இயக்குனராக நினைத்தேன். என்னை நடிகனாக சொன்னது கே.பாலசந்தர். கடமையை புரிந்து கொள்ள அனுபவம் தேவை. அது அனுபவத்தில் தான் கிடைக்கும். நேர்மை என்பது எளிமையான விஷயம். அதற்காக தியாகங்களை செய்ய வேண்டும். அவற்றை செய்திருக்கிறேன்.
மாற்றம் எங்கிருந்து செய்யப்பட வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என நீங்கள் யோசிக்க வேண்டும். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். விழித்திருத்தல் எப்போதும் முக்கியம். உங்கள் உதவி இல்லாமல் நாங்கள் செய்ய வேண்டியதை செய்ய முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.
நாம் தலைவர் என்ற குரல் உங்கள் மனதில் இருக்க வேண்டும். நீங்கள் பங்கு பெறாததால் ஏற்பட்ட பங்கங்களை எல்லாம் நீங்கள் சரிசெய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்றே நான் கருதுகிறேன்.
2019-ம் ஆண்டிலோ அல்லது 2020-ம் ஆண்டிலோ இல்லை. இன்று தொடங்குங்கள். அதை சொல்லத்தான் வந்துள்ளேன். மாணவர்கள் என்னோடு வாருங்கள். உங்களின் சக்தியை காட்டுங்கள். மாற்றம் தானாகவே வரும். மாற்றத்தை உங்களால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எதனால் உங்கள் வீட்டில் தண்ணீர் வரவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏன் என் கல்வி நிலை இன்னமும் உயரக்கூடாது? உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு எல்லா குழந்தைகளுக்கும் கிடைத்ததா என பாருங்கள். ஏன் கிடைக்கவில்லை என்று கோபப்படுங்கள். களமிறங்கி இடுப்பளவு, கழுத்தளவு அந்த தண்ணீரில் இறங்கி வேலை செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. இங்கு களமிறங்க வேண்டிய இடம் கல்வி, சுகாதாரம் போன்றவையில் தலைகுப்புற குதிக்க வேண்டும். எப்படி டாஸ்மாக்கில் குதித்தார்களோ அதுபோல இங்கே அதை செய்ய வேண்டும்.
அதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் உங்களால் முடியும், என்னால் முடியும் என என்னால் மார்தட்ட முடியாது. நான் தனியாக நிற்க மாட்டேன். நீங்கள் தான் நான் என்பதை நிரூபிக்கும் நேரம் வந்து விட்டது.
அன்பே சிவம் படத்தை இப்போது எடுக்க முடியாது. எடுத்தால் வழக்கு போடுவார்கள். வறுமையின் நிறம் சிவப்பு படத்தை மீண்டும் ரீமேக் பண்ண முடியாது. இந்தியன்-2 படத்திற்கும் பிரச்சினை ஏற்படுத்துவார்கள். அரசியல்வாதிகள் பயணம் தனியாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
இன்றைக்கு தேவர் மகன் எடுக்க முடியாது. தசாவதாரம் படத்தில் வருகிற பூவராகவன் கேரக்டர் காட்ட முடியாது. எதுக்கு எடுத்தாலும் அவர்களுக்கு கோபம் வருகிறது. பேசக்கூடாது.
பத்மாவத் படத்தை எதிர்க்கிறார்கள். நாளை நமதே என சொல்லிவிட்டு நான் எப்படி அதை வேடிக்கை பார்க்க முடியும். நமதே என சொல்வது உங்களையும் சேர்த்துதானே. பிரச்சினை செய்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அதற்காக மாணவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு செய்தார். முதல் கட்டமாக அவர் தாம்பரத்தில் சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
மாணவர்கள் மத்தியில் பேசும் போது எனக்கு தைரியம் அதிகரிக்கிறது. நான் இங்கு தலைவனாகவோ, அரசியலுக்கு வருகிறேன் என்றோ கூறவரவில்லை. நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் என்று அழைக்க வந்துள்ளேன்.
நாட்டு நடப்பை பார்க்க தொடங்குங்கள். அது உங்களின் கடமை. நான் தனியாக நிற்க மாட்டேன். நீங்கள் தான் நான். நாடு, படிப்பு, கல்வி கெட்டுப்போய் விட்டது என்று பேசுவதோடு நிற்கக்கூடாது. தவறை இன்றே சரி செய்ய வேண்டும்.
தரமான கல்வி, சுகாதாரம் வழங்குவதே அரசின் கடமை மதுவை விற்கும் அரசு திருடன் தான். அரசியல்வாதிகள் ஏழ்மையை ஒழிப்பதாக உறுதியளித்தனர். ஆனால் அவர்களின் ஏழ்மையைத் தான் ஒழித்தனர். சுவிட்சர்லாந்து வங்கி கணக்கில் பணத்தை பதுக்கியுள்ளனர். மக்களின் ஏழ்மை அகற்றப்படவில்லை.
மனஓட்டம், உருவ அமைப்பு, பேச்சுத்திறனை வைத்து அரசியல் வாதியை எடைபோடக்கூடாது. நாட்டை கொள்ளையடிப்பவர்களை அடையாளம் காண தெரிந்து கொள்ளுங்கள்.
அமைதியாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய காந்தி எனக்கு பிடித்த தலைவர். காமராஜர், பெரியார், எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோரையும் எனக்கு பிடிக்கும். இன்னும் பலரை பிடிக்கும். அதுபற்றி கூறினால் அரசியலாகி விடும்.
நான் இயக்குனராக நினைத்தேன். என்னை நடிகனாக சொன்னது கே.பாலசந்தர். கடமையை புரிந்து கொள்ள அனுபவம் தேவை. அது அனுபவத்தில் தான் கிடைக்கும். நேர்மை என்பது எளிமையான விஷயம். அதற்காக தியாகங்களை செய்ய வேண்டும். அவற்றை செய்திருக்கிறேன்.
மாற்றம் எங்கிருந்து செய்யப்பட வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என நீங்கள் யோசிக்க வேண்டும். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். விழித்திருத்தல் எப்போதும் முக்கியம். உங்கள் உதவி இல்லாமல் நாங்கள் செய்ய வேண்டியதை செய்ய முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.
நாம் தலைவர் என்ற குரல் உங்கள் மனதில் இருக்க வேண்டும். நீங்கள் பங்கு பெறாததால் ஏற்பட்ட பங்கங்களை எல்லாம் நீங்கள் சரிசெய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்றே நான் கருதுகிறேன்.
2019-ம் ஆண்டிலோ அல்லது 2020-ம் ஆண்டிலோ இல்லை. இன்று தொடங்குங்கள். அதை சொல்லத்தான் வந்துள்ளேன். மாணவர்கள் என்னோடு வாருங்கள். உங்களின் சக்தியை காட்டுங்கள். மாற்றம் தானாகவே வரும். மாற்றத்தை உங்களால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எதனால் உங்கள் வீட்டில் தண்ணீர் வரவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏன் என் கல்வி நிலை இன்னமும் உயரக்கூடாது? உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு எல்லா குழந்தைகளுக்கும் கிடைத்ததா என பாருங்கள். ஏன் கிடைக்கவில்லை என்று கோபப்படுங்கள். களமிறங்கி இடுப்பளவு, கழுத்தளவு அந்த தண்ணீரில் இறங்கி வேலை செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. இங்கு களமிறங்க வேண்டிய இடம் கல்வி, சுகாதாரம் போன்றவையில் தலைகுப்புற குதிக்க வேண்டும். எப்படி டாஸ்மாக்கில் குதித்தார்களோ அதுபோல இங்கே அதை செய்ய வேண்டும்.
அதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் உங்களால் முடியும், என்னால் முடியும் என என்னால் மார்தட்ட முடியாது. நான் தனியாக நிற்க மாட்டேன். நீங்கள் தான் நான் என்பதை நிரூபிக்கும் நேரம் வந்து விட்டது.
அன்பே சிவம் படத்தை இப்போது எடுக்க முடியாது. எடுத்தால் வழக்கு போடுவார்கள். வறுமையின் நிறம் சிவப்பு படத்தை மீண்டும் ரீமேக் பண்ண முடியாது. இந்தியன்-2 படத்திற்கும் பிரச்சினை ஏற்படுத்துவார்கள். அரசியல்வாதிகள் பயணம் தனியாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
இன்றைக்கு தேவர் மகன் எடுக்க முடியாது. தசாவதாரம் படத்தில் வருகிற பூவராகவன் கேரக்டர் காட்ட முடியாது. எதுக்கு எடுத்தாலும் அவர்களுக்கு கோபம் வருகிறது. பேசக்கூடாது.
பத்மாவத் படத்தை எதிர்க்கிறார்கள். நாளை நமதே என சொல்லிவிட்டு நான் எப்படி அதை வேடிக்கை பார்க்க முடியும். நமதே என சொல்வது உங்களையும் சேர்த்துதானே. பிரச்சினை செய்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.