செய்திகள்

குடியரசு தின விழா: அரியலூரில் லெட்சுமிபிரியா சாந்தா தேசிய கொடி ஏற்றினார்

Published On 2018-01-26 14:40 IST   |   Update On 2018-01-26 14:40:00 IST
அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் லெட்சுமிபிரியா தேசியகொடியை ஏற்றி வைத்தார்
அரியலூர்:

அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் லெட்சுமிபிரியா தேசியகொடியை ஏற்றி வைத்தார். உலக சமாதானத்தை விரும்பும் பொருட்டு வென்புறாக்களை பறக்கவிட்டார், திறந்தவெளி ஜீப்பில் மாவட்ட கலெக்டர் லெட்சுமிபிரியா, மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் ஆகியோர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

சுதந்திரப் போராட்ட தியாகிகள் சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர். முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் 3 நபர்களுக்கு 75 ஆயிரமும், வேளாண்மை துறை மூலம் 7 நபர்களுக்கு 50 ஆயிரமும் உட்பட ரூ.1.25 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காவல் துறை, தீயனைப்புதுறை, வருவாய்துறையில் சிறப்பாக பனியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது, காவல் துறையில் சிறப்பாக பனியாற்றியவர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் தனசேகரன், மாவட்ட திட்ட அலுவலர் லோகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் கதிரேசன், ஊராட்சி உதவி இயக்குனர் பழனிச்சாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, இந்து சமய அற நிலையத்துறை உதவி அலுவலர் செந்தில்குமார், வேளாண்மைதுறை இணைஇயக்குனர் அய்யாசாமி, கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் செல்வ ராஜ், வேளாண்மை செயல் பொறியாளர் கோமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், உதவி அலுவலர் சரவணன், சிவக்குமார், ஆர்டிஓ அரியலூர் மோகனராஜன், உடையார்பாளையம் டீனா குமாரி,

தாசில்தார் முத்துலெட்சுமி, உமாமகேஸ்வரி, வேல்முருகன், ராஜமூர்த்தி, அரசு கேபிள்டிவி தாசில்தார் முத்துகிருஷ்ணன், மாவட்ட நூலக அலுவலர் ஜோதிமணி, யூனியன் கமிஷ்னர் பிரபாகரன், ராஜேந்திரன், நகராட்சி கமி‌ஷனர் வினோத், மாவட்ட கூடுதல் காவல்துறை கண்கானிப்பாளர் சண்முக நாதன், டி.எஸ்.பி. மோகன்தாஸ், கென்னடி, சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள், அரசு தனியார் தொழிற்சாலைகள், மத்திய மாநில அரசு அலுவலகங்களில் குடியரசுதின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது. #tamilnews

Similar News