செய்திகள்
குடியரசு தின விழா: காஞ்சீபுரத்தில் கலெக்டர் பொன்னையா தேசிய கொடி ஏற்றினார்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் பொன்னையா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் குடியரசு தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் பொன்னையா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து 121 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 45 லட்சத்து 60 ஆயிரத்து 82 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பொன்னையா வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர் முகமது, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர் செல்வி, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. #Tamilnews
காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் குடியரசு தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் பொன்னையா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து 121 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 45 லட்சத்து 60 ஆயிரத்து 82 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பொன்னையா வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர் முகமது, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர் செல்வி, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. #Tamilnews