செய்திகள்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தாம்பரத்தில் 27-ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2018-01-25 14:30 IST   |   Update On 2018-01-25 14:30:00 IST
பஸ் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க.வினர் தாம்பரம் சண்முகம் சாலையில் 27-ந்தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
சென்னை:

பஸ் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க.வினர் தாம்பரம் சண்முகம் சாலையில் 27-ந்தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ரூபி மனோகரன், சுந்தரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மேகநாதன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மகேந்திரன், பார்த்தீபன், விடுதலை சிறுத்தைகள் தமிழரசன், ராஜ்குமார், அருள் பிரகாசம், மற்றும் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், விவசாய தொழிலாளர் கட்சி, த.மு.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி பிரமுகர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

தாம்பரம் நகர தி.மு.க. செயலாளர் ஆர்.ராஜா வரவேற்று பேசுகிறார்.

இதில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தீர்மானக்குழு உறுப்பினர் வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் படப்பை மனோகரன், தண்டபாணி, மேடவாக்கம் ரவி, ரமேஷ்கண்ணா உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தாம்பரம் நகரமே அதிர்ந்திடும் வகையில் ஆயிரக்கணக்கில் நிர்வாகிகள் அணி திரண்டு வந்து பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் கேட்டுக்கொண்டுள்ளார். இதையொட்டி சுமார் 10 ஆயிரம் பேர்களை திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. #Tamilnews

Similar News