செய்திகள்

போலீசார் துரத்தியதால் மின்கம்பத்தில் ஏறி கிளீனர் தற்கொலை முயற்சி

Published On 2018-01-24 12:41 IST   |   Update On 2018-01-24 12:41:00 IST
போலீசார் தன்னை பிடிக்க வந்ததால் அவர்களிடம் இருந்து தப்பிக்க மின் கம்பத்தில் ஏறி கிளீனர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவான்மியூர்:

நீலாங்கரையை அடுத்த கானத்தூர் இந்திரா நகரில் வசித்து வருபவர் ரவி (வயது 25). தனியார் கழிவுநீர் லாரியில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி ஆகும்.

இவர் கடந்த வாரம் இரவில் லாரியை கானத்தூரில் உள்ள சினிமா தியேட்டர் எதிரில் நிறுத்திவிட்டு மது குடித்தார். பின்னர் லாரியிலேயே தூங்கினார்.

அப்போது அங்கு வந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் ரவியை பிடித்து சென்றனர். அதன்பிறகு அவரை விட்டுவிட்டனர்.

இந்த நிலையில் ரவி மீது ரவுடி என்று வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசில் சிக்காமல் இருந்கார்.

இந்த நிலையில் நேற்று மதியம் ரவி வேலை முடிந்து சென்று கானத்தூர் பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை தேடி போலீசார் சென்றனர். போலீசாரை பார்த்ததும் ரவி ஓடினார். போலீசார் அவரை துரத்தினார்கள்.

இதனால் ரவி மின் கம்பத் தில் ஏறி உயர் அழுத்த மின் கம்பியை பிடித்தார். அவர் மின்சாரம் தாக்கி உடல் கருகிய நிலையில் தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரது நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. #tamilnews

Similar News