செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1868 மையங்களில் போலியோ சொட்டு மருந்து

Published On 2018-01-23 07:47 GMT   |   Update On 2018-01-23 07:47 GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1868 மையங்களில் சுமார் 3 லட்சத்து 39 ஆயிரத்து 730 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

போலியோ சொட்டு மருந்து முதல்கட்டமாக வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) இரண்டாம் கட்டமாக வரும் மார்ச் மாதம்11-ந்தேதியும் வழங்கப்பட உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1868 மையங்களில் சுமார் 3 லட்சத்து 39 ஆயிரத்து 730 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், திருவிழா நடைபெறும் இடங்கள், பொழுதுபோக்கு பூங்கா ஆகிய இடங்களில் தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு வரும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து கட்டுமான பணிக்காக வந்துள்ள பணியாளர்களின் குழந்தைகள் எண்ணிக்கை தனியாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கு சொட்டுமருந்து வழங்க 29 நடமாடும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News