செய்திகள்
பொத்தேரி தனியார் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை
பொத்தேரி தனியார் கல்லூரி விடுதி மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு:
தாம்பரத்தை அடுத்த பொத்தேரியில் எஸ்.ஆர்.எம். கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆந்திராவைச் சேர்ந்த சாய்நித்தின் (வயது21) என்ற மாணவர் பி.இ. 4-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியிலேயே தங்கி இருந்தார்.
நேற்று இரவு கல்லூரி விடுதியின் 3-வது மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவர் கடந்த செமஸ்டர் தேர்வில் காப்பி அடித்ததாகவும், பேராசிரியர்கள் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததால் தற்கொலை செய்தாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் இதை உறுதி செய்யவில்லை.
கல்லூரி விடுதி மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. #tamilnews
தாம்பரத்தை அடுத்த பொத்தேரியில் எஸ்.ஆர்.எம். கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆந்திராவைச் சேர்ந்த சாய்நித்தின் (வயது21) என்ற மாணவர் பி.இ. 4-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியிலேயே தங்கி இருந்தார்.
நேற்று இரவு கல்லூரி விடுதியின் 3-வது மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவர் கடந்த செமஸ்டர் தேர்வில் காப்பி அடித்ததாகவும், பேராசிரியர்கள் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததால் தற்கொலை செய்தாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் இதை உறுதி செய்யவில்லை.
கல்லூரி விடுதி மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. #tamilnews