செய்திகள்
காசிமேடு ரவுடி கொலை: கொலையாளிகள் 6 பேர் கோர்ட்டில் சரண் அடைய திட்டம்
காசிமேடு ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகள் 6 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்போரூர்:
சென்னை காசிமேடு ஒய்.எம்.சி.ஏ. குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் பிரபல ரவுடி. காக்காதோப்பு பாலாஜி கூட்டாளி. இவர் மீது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த 1 மாதத்திற்கு முன்பு மனைவி மற்றும் குழந்தைகளுடன் ரவீந்திரன் திருப்போரூரை அடுத்த தண்டலம் பாரதிநகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி தலைமறைவாக இருந்தார்.
நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் மனைவி மலர்கொடியுடன் திருப்போரூர் ரவுண்டானா அருகே ரவீந்திரன் சென்றபோது அவரை சுற்றிவளைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் கழுத்து மற்றும் தலை பகுதியில் சரமாரியாக வெட்டினர்.
ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். உடனே 6 பேரும் தப்பினர்.
இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காக்கா தோப்பு பாலாஜி, கூட்டாளியான அவரை எதிர் கோஷ்டியான கல்வெட்டு ரவி கோஷ்டியினர் கொலை செய்தனரா? அல்லது கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள ரவீந்திரன் மீது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இதை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கொலையாளிகள் யார்? என்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் காசிமேட்டை சேர்ந்த குட்டி, குமரன், கமல், ராம்கி மற்றும் பேர் தெரியாத 2 பேர் எனவும், இன்று சென்னையில் உள்ள ஏதாவது நீதிமன்றத்தில் கொலையாளிகள் சரணடையக்கூடும் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சென்னை காசிமேடு ஒய்.எம்.சி.ஏ. குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் பிரபல ரவுடி. காக்காதோப்பு பாலாஜி கூட்டாளி. இவர் மீது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த 1 மாதத்திற்கு முன்பு மனைவி மற்றும் குழந்தைகளுடன் ரவீந்திரன் திருப்போரூரை அடுத்த தண்டலம் பாரதிநகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி தலைமறைவாக இருந்தார்.
நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் மனைவி மலர்கொடியுடன் திருப்போரூர் ரவுண்டானா அருகே ரவீந்திரன் சென்றபோது அவரை சுற்றிவளைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் கழுத்து மற்றும் தலை பகுதியில் சரமாரியாக வெட்டினர்.
ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். உடனே 6 பேரும் தப்பினர்.
இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காக்கா தோப்பு பாலாஜி, கூட்டாளியான அவரை எதிர் கோஷ்டியான கல்வெட்டு ரவி கோஷ்டியினர் கொலை செய்தனரா? அல்லது கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள ரவீந்திரன் மீது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இதை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கொலையாளிகள் யார்? என்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் காசிமேட்டை சேர்ந்த குட்டி, குமரன், கமல், ராம்கி மற்றும் பேர் தெரியாத 2 பேர் எனவும், இன்று சென்னையில் உள்ள ஏதாவது நீதிமன்றத்தில் கொலையாளிகள் சரணடையக்கூடும் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.