செய்திகள்
கர்நாடக - தமிழக எல்லையில் இரு மாநில போலீசார் ஆலோசனை
மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடமாட்டத்தை தடுப்பதற்காக கர்நாடக - தமிழக ஆகிய இரு மாநில போலீசார் ஆலோசனை நடத்தினர்.
ஈரோடு:
கேரள மாநில வனப் பகுதியில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளது. இவர்கள் அவ்வப்போது திடீர்.. திடீரென போலீசாரிடம் மோதி வருகிறார்கள்.
இதையொட்டி மாவோயிஸ்டு தீவிரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீவிரவாதிகளின் நடமாட்டம் பாலக்காடு- கோவை வனப்பகுதியிலும் உள்ளது. இதையொட்டி இருமாநில போலீசாரும் இணைந்து மாவோயிஸ்டு தீவிரவாதிகளை கண்காணித்து அவர்களை பிடிக்கும் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இதேபோல் இந்த மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளான சத்தியமங்கலம், தாளவாடி பகுதியில் ஊடுருவாமல் தடுக்கவும் இதேபோல் கர்நாடக மாநில எல்லையான சாம்ராஜ் நகர் வனப் பகுதியிலும் ஊடுருவாமல் இருக்கவும் இருமாநில போலீசார் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக இருமாநில போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் பூதி படுகையில் உள்ள போலீஸ் நிலையத்தில் நடந்தது. இதில் சாம்ராஜ் நகர் மாவட்ட டி.எஸ்.பி கங்காதரசாமி, சாம்ராஜ் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையப்பா, தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் நீலகிரி மாவட்ட மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், கொள்ளேகால் இன்ஸ்பெக்டர் சிவசாமி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இரு மாநில எல்லைகளில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து பிடிக்க வேண்டும். தீவிரவாதிகளின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் இரு மாநில (ஈரோடு, ஊட்டி-சாம்ராஜ் நகர் மாவட்ட) எல்லைகளில் குற்றச் செயல்களை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுப்பது என ஆலோசிக்கப்பட்டது.
கேரள மாநில வனப் பகுதியில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளது. இவர்கள் அவ்வப்போது திடீர்.. திடீரென போலீசாரிடம் மோதி வருகிறார்கள்.
இதையொட்டி மாவோயிஸ்டு தீவிரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீவிரவாதிகளின் நடமாட்டம் பாலக்காடு- கோவை வனப்பகுதியிலும் உள்ளது. இதையொட்டி இருமாநில போலீசாரும் இணைந்து மாவோயிஸ்டு தீவிரவாதிகளை கண்காணித்து அவர்களை பிடிக்கும் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இதேபோல் இந்த மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளான சத்தியமங்கலம், தாளவாடி பகுதியில் ஊடுருவாமல் தடுக்கவும் இதேபோல் கர்நாடக மாநில எல்லையான சாம்ராஜ் நகர் வனப் பகுதியிலும் ஊடுருவாமல் இருக்கவும் இருமாநில போலீசார் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக இருமாநில போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் பூதி படுகையில் உள்ள போலீஸ் நிலையத்தில் நடந்தது. இதில் சாம்ராஜ் நகர் மாவட்ட டி.எஸ்.பி கங்காதரசாமி, சாம்ராஜ் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையப்பா, தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் நீலகிரி மாவட்ட மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், கொள்ளேகால் இன்ஸ்பெக்டர் சிவசாமி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இரு மாநில எல்லைகளில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து பிடிக்க வேண்டும். தீவிரவாதிகளின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் இரு மாநில (ஈரோடு, ஊட்டி-சாம்ராஜ் நகர் மாவட்ட) எல்லைகளில் குற்றச் செயல்களை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுப்பது என ஆலோசிக்கப்பட்டது.