செய்திகள்

அரியலூர் அருகே அ.தி.மு.க. தொண்டர் மர்ம மரணம்

Published On 2017-11-26 19:25 IST   |   Update On 2017-11-26 19:25:00 IST
அரியலூர் அருகே அ.தி.மு.க. தொண்டர் ரெயில்வே பாலத்தின் கீழ் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த தளவாய் அருகே உள்ள சிலப்பனூர் கிராமம். இங்குள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் நேற்றிரவு ஆண் பிணம் ஒன்று கிடந்தது.

இது குறித்த தகவல் அறிந்ததும் தளவாய் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது அங்கு 42 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார். இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த கிடந்த தொழிலாளியின் பெயர், ஊர் விவரம் தெரியவில்லை. எப்படி இறந்தார் என்றும் தெரியவில்லை. அவர் இறந்து கிடந்த இடம் அருகே வி‌ஷப்பாட்டில் கிடந்தது. இதனால் அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.

மேலும் அவரது கையில் எம்.ஜி.ஆர். மற்றும் இரட்டை இலை பச்சை குத்தியிருந்தார். இதனால் அவர் அ.தி.மு.க. தொண்டர் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News