செய்திகள்

அரியலூரில் அரசு பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2017-11-22 10:31 GMT   |   Update On 2017-11-22 10:31 GMT
அரியலூரில் அரசு பஸ் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:

அரியலூர் புதிய மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் குமரசாமி. அரசு போக்குவரத்து கழக ஊழியர். இவரது மகன் ஜோதி பிரகாஷ், என்ஜினீயரிங் படித்து விட்டு வேலைக்கு செல்ல இருந்தார். அரியலூர் சிங்கார தெருவை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டபாணியின் மகன் பாரதி.

ஜோதிபிரகாசும், பாரதியும் நண்பர்கள். நேற்றிரவு இருவரும் அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மின்நகர் அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதின.

இதில் 2பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். உடனே அவர்களை பொது மக்கள் மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதிபிரகாஷ் இறந்தார். பாரதி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News