செய்திகள்

காளையார்கோவில் அருகே மீன் வியாபாரி கொலை

Published On 2017-11-15 15:41 IST   |   Update On 2017-11-15 15:41:00 IST
காளையார்கோவில் அருகே தலையில் காயத்துடன் மீன் வியாபாரி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா, அழகாபுரியைச் சேர்ந்தவர் கணபதி (வயது 55), மீன் வியாபாரி. இவர் நேற்று வியாபாரத்தை முடித்து விட்டு வந்தார்.

பின்னர் வெளியில் சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் கணபதி வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அழகாபுரி அருகே உள்ள கொல்லங்குடி சாலையில் தலையில் காயத்துடன் கணபதி கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார்.

இது குறித்து காளையார் கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் கல்யாணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தலையில் காயம் இருந்ததால் அவரை யாரோ அடித்து கொலை செய்திருப்பதாக போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Similar News