செய்திகள்

திருப்பத்தூரில் துப்புரவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

Published On 2017-11-10 13:51 GMT   |   Update On 2017-11-10 13:51 GMT
திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில் 38 துப்புரவு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அரசு விடுமுறை அளிக்க வேண்டும், துப்புரவு பணிக்காக புதிதாக பணியில் சேர்ந்த 7 பேருக்கு அலுவலக பணி வழங்காமல் துப்புரவு பணியை வழங்க வேண்டும்.

குப்பை அள்ளுவதற்கான உபகரணங்கள்- சீருடைகள் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தன. ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று துப்புரவு ஊழியர்கள் திடீரென பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 26 பேர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News