செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

Published On 2017-10-16 16:22 IST   |   Update On 2017-10-16 16:22:00 IST
தண்ணீர் வரத்து குறைந்ததால் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 10 மணி நிலவரப்படி 79.68 அடியாக இருந்தது.
ஈரோடு:

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைக்கு தண்ணீர் நேற்று வரை மிதமாக வந்து கொண்டிருந்தது. வினாடிக்கு 1600 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

ஆனால் இன்று காலை முதல் அணைக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து அதாவது 1000 கனஅடி குறைந்தது. வினாடிக்கு 648 கனஅடி வீதமே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து ஆற்றுக்கு 1050 கனஅடி வீதமும் வாய்க்காலுக்கு 2200 கனஅடி வீதமும் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் இன்று காலை 10 மணி நிலவரப்படி 79.68 அடியாக இருந்தது.

நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்தால் மட்டுமே அணைக்கு தண்ணீர் மேலும் அதிகரிக்கும். மழை பெய்து அணைக்கு தண்ணீர் வந்தால் தண்ணீர் திறப்பு தடைபெறாமல் இருக்கும்.

Similar News