செய்திகள்
ஆசனூரில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்: கர்நாடக மாநில வாலிபர் பலி
ஆசனூரில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கர்நாடக மாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சத்தியமங்கலம்:
கர்நாடக மாநிலம் ஒஸ்பட்டை சேர்ந்தவர் மாதேவன் (வயது38). இவரது அக்கா வீடு சத்தி வனப்பகுதி கெத்தேசாலில் உள்ளது. அக்கா உடல் நலம் சரியில்லாமல் இருந்தாராம். இதனால் தன் அக்காவை பார்க்க மாதேவன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அக்காவை பார்த்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.
ஆசனூரில் ஒரு ஓட்டல் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு வேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். அவர் மீது மோதிய வேன் டிரைவர் கீழே குதித்து ஓடி விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாதேவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் ஒஸ்பட்டை சேர்ந்தவர் மாதேவன் (வயது38). இவரது அக்கா வீடு சத்தி வனப்பகுதி கெத்தேசாலில் உள்ளது. அக்கா உடல் நலம் சரியில்லாமல் இருந்தாராம். இதனால் தன் அக்காவை பார்க்க மாதேவன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அக்காவை பார்த்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.
ஆசனூரில் ஒரு ஓட்டல் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு வேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். அவர் மீது மோதிய வேன் டிரைவர் கீழே குதித்து ஓடி விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாதேவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.