செய்திகள்

வேதாரண்யம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் மீது வழக்கு

Published On 2017-10-06 20:33 IST   |   Update On 2017-10-06 20:33:00 IST
வேதாரண்யம் பகுதியில் சாராயம் விற்ற இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் காவல் சரக துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் மற்றும் போலீசார் அகஸ்தியன்பள்ளியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள கருவைக்காட்டு பகுதியில் பதுங்கியிருந்து சாராயம் விற்றவர்ளை பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோடி விட்டார்கள்.

அங்கு பாலித்தீன் பையில் அடைக்கபட்ட 10 சாராய பாக்கெட்டுகள் இருந்ததை கைப்பற்றி விசாரணை செய்ததில் அவர்கள் அகஸ்தியன்பள்ளியைச் சேர்ந்த உலகநாதன் மற்றும் ரமேஷ்குமார் என தெரியவந்தது. இருவர் மீதும் தனித்தனியே வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

Similar News