செய்திகள்
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.வில் பிளவு - தலைமையிடம் போட்டி போட்டு புகார்
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கட்சி தலைமையிடம் போட்டி போட்டுக் கொண்டு புகார் அளிப்பதால், கட்சியில் பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் அருகே ரோட்டோரத்தில் பெரியார்- அண்ணா சிலைகள் இருந்தன. போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அந்த சிலைகள் பன்னீர் செல்வம் பார்க்கின் உள்ளே வைக்கப்பட்டன.
இதற்கான செலவுகள் அனைத்தும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்கப்பட்டது. இதற்காக பெரிய பீடம் அமைத்து அதில் பொயார்-அண்ணா முழு உருவ சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலகமும் இங்கு அமைக்கப்பட்டு உள்ளன. இவைகளை ஈரோட்டுக்கு வந்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட பீடத்தில் பெரியார், அண்ணா சிலைகள் அருகே ஈரோடு மாநகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர், சிலை வைக்கப்பட்டது.
பெரியார்-அண்ணா சிலைகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த மறுநாளே அங்கு எம்.ஜி.ஆர். சிலை அமைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தி.மு.க.வில் ஒரு பிரிவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி மாவட்ட தி,.மு.க. துணை செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:-
தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் வசூல் செய்து அமைக்கப்பட்ட பீடத்தில் அண்ணா,பெரியார் சிலைகள் அருகே எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்பட்டது தவறு. அதிலும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி முன்னிலையிலேயே அங்கு எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்பட்டதை உண்மையான எந்த தி.மு.க. தொண்டர்களும் ஏற்று கொள்ளமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது பற்றி செந்தில்குமார் தரப்பினர் கட்சி தலைமைக்கும் புகார் தொவித்து கடிதம் எழுதி உள்ளனர். இதைத்தொடர்ந்து கட்சி தலைமை அழைப்பின் போல ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி சென்னை சென்றார். மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் விளக்கம் அளித்தார்.
அன்று இரவே ஈரோடு திரும்பிய அவர் பெரியார் நகரில் உள்ள தனது இல்லத்தில் விளக்க கூட்டம் நடத்தினார். இரவு 10 மணி அளவில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் பி. கே. பழனிச்சாமி, மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளர் குமாரசாமி போன்ற நிர்வாகிகள் மேலும் சிலர் கலந்து கொள்ளவில்லை.
மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி விளக்கம் அளித்தது பற்றி முத்துசாமி பேசினார்.
இது பற்றி துணை செயலாளர் செந்தில்குமார் கூறும்போது ‘‘மாவட்ட செயலாளர் முத்துசாமி இல்லத்தில் நடந்த கூட்டம் அவரது ஆதரவாளர்கள் கூட்டம். எனவே இதில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை.
கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்தினால் அதில் நாங்கள் கலந்து கொள்வோம். அப்போது எங்கள் அதிருப்தியை தொவிப்போம்’’ என்று கூறினர்.
இதற்கிடையே அதிருப்தியாளர்கள் ரகசியமாக கூடி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் நாளை (வியாழக்கிழமை) சென்னை செல்கிறார்கள். அங்கு மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கிறார்கள்.
ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்த என்.கே.கே.பி. ராஜாவின் ஆதரவாளர்கள் முத்துசாமி மீது அதிருப்தியாக உள்ளனர்.
இந்த நிலையில் இப்போது முத்துசாமிக்கு நெருக்கமாக இருந்தவர்களும் அவர் மீது அதிருப்திக்குள்ளாகி இருப்பது ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.வில் பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் அருகே ரோட்டோரத்தில் பெரியார்- அண்ணா சிலைகள் இருந்தன. போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அந்த சிலைகள் பன்னீர் செல்வம் பார்க்கின் உள்ளே வைக்கப்பட்டன.
இதற்கான செலவுகள் அனைத்தும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்கப்பட்டது. இதற்காக பெரிய பீடம் அமைத்து அதில் பொயார்-அண்ணா முழு உருவ சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலகமும் இங்கு அமைக்கப்பட்டு உள்ளன. இவைகளை ஈரோட்டுக்கு வந்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட பீடத்தில் பெரியார், அண்ணா சிலைகள் அருகே ஈரோடு மாநகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர், சிலை வைக்கப்பட்டது.
பெரியார்-அண்ணா சிலைகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த மறுநாளே அங்கு எம்.ஜி.ஆர். சிலை அமைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தி.மு.க.வில் ஒரு பிரிவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி மாவட்ட தி,.மு.க. துணை செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:-
தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் வசூல் செய்து அமைக்கப்பட்ட பீடத்தில் அண்ணா,பெரியார் சிலைகள் அருகே எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்பட்டது தவறு. அதிலும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி முன்னிலையிலேயே அங்கு எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்பட்டதை உண்மையான எந்த தி.மு.க. தொண்டர்களும் ஏற்று கொள்ளமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது பற்றி செந்தில்குமார் தரப்பினர் கட்சி தலைமைக்கும் புகார் தொவித்து கடிதம் எழுதி உள்ளனர். இதைத்தொடர்ந்து கட்சி தலைமை அழைப்பின் போல ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி சென்னை சென்றார். மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் விளக்கம் அளித்தார்.
அன்று இரவே ஈரோடு திரும்பிய அவர் பெரியார் நகரில் உள்ள தனது இல்லத்தில் விளக்க கூட்டம் நடத்தினார். இரவு 10 மணி அளவில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் பி. கே. பழனிச்சாமி, மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளர் குமாரசாமி போன்ற நிர்வாகிகள் மேலும் சிலர் கலந்து கொள்ளவில்லை.
மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி விளக்கம் அளித்தது பற்றி முத்துசாமி பேசினார்.
இது பற்றி துணை செயலாளர் செந்தில்குமார் கூறும்போது ‘‘மாவட்ட செயலாளர் முத்துசாமி இல்லத்தில் நடந்த கூட்டம் அவரது ஆதரவாளர்கள் கூட்டம். எனவே இதில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை.
கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்தினால் அதில் நாங்கள் கலந்து கொள்வோம். அப்போது எங்கள் அதிருப்தியை தொவிப்போம்’’ என்று கூறினர்.
இதற்கிடையே அதிருப்தியாளர்கள் ரகசியமாக கூடி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் நாளை (வியாழக்கிழமை) சென்னை செல்கிறார்கள். அங்கு மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கிறார்கள்.
ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்த என்.கே.கே.பி. ராஜாவின் ஆதரவாளர்கள் முத்துசாமி மீது அதிருப்தியாக உள்ளனர்.
இந்த நிலையில் இப்போது முத்துசாமிக்கு நெருக்கமாக இருந்தவர்களும் அவர் மீது அதிருப்திக்குள்ளாகி இருப்பது ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.வில் பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.