செய்திகள்

பண்ருட்டி அருகே இளம்பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது

Published On 2017-09-12 16:40 IST   |   Update On 2017-09-12 16:40:00 IST
பண்ருட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் குமார். கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி இவரது மகள் புஷ்பா தேவி. இவரது பெற்றோர்கள் கடந்த டிசம்பர் மாதம் கரும்பு வெட்டும் வேலைக்கு தஞ்சாவூருக்கு சென்று இருந்தனர்.

அப்போது வீட்டில் புஷ்பா தேவி தனியாக இருந்தார். இதைஅறிந்த பக்கத்து ஊரான கொரத்தி கிராமத்தை சேர்ந்த வாலிபர் விஜயகுமார் இரவு 10 மணியளவில் வீட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த புஷ்பா தேவியை வலுக்கட்டாயமாக கற்பழித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

வெளியூருக்கு வேலைக்கு சென்று ஊர் திரும்பிய பெற்றோர்களிடம் புஷ்பா தேவி கூறினார். இது குறித்து பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

பண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி நாகரத்தினம் வழக்கு பதிவு செய்து வாலிபர் விஜயகுமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்.

Similar News