செய்திகள்

கடலூரில் அழகு நிலையத்துக்கு வேலைக்கு சென்ற பெண் மாயம்

Published On 2017-09-09 12:03 GMT   |   Update On 2017-09-09 12:03 GMT
கடலூரில் அழகு நிலையத்துக்கு வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
கடலூர்:

கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரதுமகள் தாரணி (வயது21). இவர் அதே பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் வேலைபார்த்து வந்தார். நேற்று காலை தாரணி வழக்கம்போல் வேலைக்கு சென்றார்

அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை. இதனை தொடர்ந்து தாரணியின் தாயார் விஜயா முதுநகர் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து இளம் பெண் தாரணி எங்கு சென்றார். அல்லது அவரை யாராவது கடத்தி சென்றுவிட்டார்களா? என தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News