செய்திகள்

மொடக்குறிச்சியில் மறியல் நடத்த முயன்ற அரசு ஊழியர்கள் கைது

Published On 2017-09-07 17:32 IST   |   Update On 2017-09-07 17:32:00 IST
மொடக்குறிச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்த முயன்ற அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
மொடக்குறிச்சி:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கே.ரவிக்குமார், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கே.முருகன், வருவாய்த்துறை சார்பில் மாசிலாமணி, சத்துணவு திட்டம் சார்பில் மூர்த்தி, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மணிமாலா, ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் கிருஷ்ணவேணி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, அரசு அமுல்படுத்தும் ஜிபிஎஸ் திட்டத்தை உடனடியாக ரத்து செய்யவும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஈரோடு முத்தூர் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். அப்போது, ஈரோடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், ஈரோடு குற்றவியல் இன்ஸ்பெக்டர் முருகன், மொடக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Similar News