செய்திகள்
மாமல்லபுரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
மாமல்லபுரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 32). கடந்த 27-ந் தேதி மழை பெய்த போது வீட்டருகே உள்ள மின் கம்பி உரசி தூக்கி வீசப்பட்டார். ஆபத்தான நிலையில் அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கோவிந்த சாமி இறந்தார்.
இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.