பள்ளிக்கரணையில் கல்லூரி மாணவர் தற்கொலை
பள்ளிக்கரணை:
பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர், சாய் தெருவை சேர்ந்தவர். அழகப்பன் இவரது மகன் ஜெயபிரகாஷ் (வயது 20) மேடவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
ஜெயபிரகாஷ் சரியாக படிக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் 7 அரியர்ஸ் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்து படிக்கும் படி கூறிவந்தனர்.
இதில் மனவேதனை அடைந்த ஜெயப்பிரகாஷ் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பள்ளிக்கரைணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புழல் அடுத்த கதிர்வேடு பகுதியை சேர்ந்தவர் மதியழகன் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 20) இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
நேற்று இரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த புவனேஸ்வரி உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார். அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இன்று காலை புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து புழல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.