ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ்-வேன் மோதல்: 15 பேர் படுகாயம்
ஸ்ரீபெரும்புதூர்:
பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் நோக்கி இன்று காலை தனியார் பஸ் சென்றது. ஸ்ரீபெரும்புதூரை அடுத்த காட்டு கூட்டு ரோடு அருகே வந்த போது, எதிரே திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி திருமண கோஷ்டியினர் வேன் வந்தது.
திடீரென வேனும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரும் இதில் சிக்கிக் கொண்டார்.
வேனில் இருந்த பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் இருந்து கோயம்பேடுக்கு நேற்று இரவு அரசு பஸ் (எண்.122) வந்து கொண்டிருந்தது. தாம்பரத்தை அடுத்த நாகல்கேணி சிக்னல் அருகே வந்தபோது கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதியது. இதில் பஸ்சில் இருந்த டிரைவர் சேகர், கண்டக்டர் பாபு மற்றும் 16 பயணிகள் காயம் அடைந்தனர்.