செய்திகள்
இன்று மாலை பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைய உள்ள பெரிய அரசியல் மாற்றம் இன்று மாலை நடக்க உள்ளது என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
கோபி அடுத்த வெள்ளாளபாளையத்தில் நடந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-
தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைய உள்ள பெரிய மாற்றம் இன்று மாலை நடக்க உள்ளது. அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இன்று மாலை இணைகிறது. இந்த அரசியல் மாற்றம் அ.தி.மு.க.தொண்டர்களுக்கு மட்டுமல்ல. தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணையும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அ.தி.மு.க.வை.அம்மா வழியில் நடக்கும் இந்த அரசை யாரும் அசைக்க முடியாது. இந்த ஆட்சி இன்னும் 4 ஆண்டு அல்ல 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும். யாரும் எதுவும் செய்ய முடியாது.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவுரைபடி கல்வித்துறை இன்று புதிய எழுச்சியுடன் புதிய உட்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
கோபி அடுத்த வெள்ளாளபாளையத்தில் நடந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-
தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைய உள்ள பெரிய மாற்றம் இன்று மாலை நடக்க உள்ளது. அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இன்று மாலை இணைகிறது. இந்த அரசியல் மாற்றம் அ.தி.மு.க.தொண்டர்களுக்கு மட்டுமல்ல. தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணையும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அ.தி.மு.க.வை.அம்மா வழியில் நடக்கும் இந்த அரசை யாரும் அசைக்க முடியாது. இந்த ஆட்சி இன்னும் 4 ஆண்டு அல்ல 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும். யாரும் எதுவும் செய்ய முடியாது.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவுரைபடி கல்வித்துறை இன்று புதிய எழுச்சியுடன் புதிய உட்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.