செய்திகள்

ரெயில் மோதி தண்டவாளத்தில் உயிருக்கு போராடிய பயணி மரணம்

Published On 2017-08-17 16:20 IST   |   Update On 2017-08-17 16:20:00 IST
சங்ககிரி ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி தண்டவாளத்தில் உயிருக்கு போராடிய பயணி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:

ஈரோடு ரெயில் நிலையத்திற்கு உட்பட்ட சங்ககிரி ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு உயிருக்கு போராடி கொண்டு இருப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து ரெயில்வே போலீசார் சென்று அந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன போன்ற விவரம் தெரியவில்லை. இறந்தவர் பஞ்சை நிற கோடு போட்ட அரை கை சட்டையும், லைட் சிமெண்ட் கலர் பேண்டும் அணிந்திருந்தார்.

அவர் ரெயில் பயணம் செய்த போது தவறி கீழே விழுந்தாரா? அல்லது சங்ககிரி ஆர்.எஸ்.பகுதியில் நடந்த சென்ற போது ரெயில் மோதி இறந்தாரா? என்று தெரியவில்லை.

Similar News