செய்திகள்

புவனகிரி அருகே இடி தாக்கி மீனவர் பலி

Published On 2017-08-12 10:33 GMT   |   Update On 2017-08-12 10:33 GMT
கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மழை கொட்டியது. இதில் இடி தாக்கி மீனவர் ஒருவர் இறந்து உள்ளார்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்துள்ள பூ.மாணம்பாடியை சேர்ந்தவர் சங்கர் (வயது 50), மீனவர். இவர் நேற்று இரவு பைபர் படகில் பூ.மாணம்பாடி வெள்ளாற்றின் முக துவாரத்தில் மீன் பிடிக்க சென்றார்.

அப்போது புவனகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

வெள்ளாற்றின் முக துவாரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த சங்கரின் பைபர் படகில் இடி தாக்கியது. இதில் அவர் அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த தகவல் அவரது குடும்பத்துக்கு தெரிய வந்ததும் அவர்கள் கதறி அழுதனர்.

இடி தாக்கி மீனவர் இறந்த தகவல் பரங்கிப்பேட்டை போலீசாருக்கு இன்று காலை தெரிய வந்தது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று வெள்ளாற்றின் முகத்துவாரத்தில் இறந்து கிடந்த சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இடி தாக்கி மீனவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News