செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் 15-ந்தேதி மதுக்கடைகள் அடைப்பு: கலெக்டர்
கடலூர் மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும், மதுபானம் அருந்தும் இடங்களும் மூடியிருக்க வேண்டும் என கலெக்டர் ராஜேஷ் அறிவித்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15-ந் தேதி சுதந்திர தினத்தன்று கடலூர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும், மதுபானம் அருந்தும் இடங்களும் மூடியிருக்க வேண்டும்.
இதனை மீறி எவரேனும் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ, திறந்து வைத்திருந்தாலோ கடை மேற்பார்வையாளர் பேரிலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15-ந் தேதி சுதந்திர தினத்தன்று கடலூர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும், மதுபானம் அருந்தும் இடங்களும் மூடியிருக்க வேண்டும்.
இதனை மீறி எவரேனும் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ, திறந்து வைத்திருந்தாலோ கடை மேற்பார்வையாளர் பேரிலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.