செய்திகள்
அம்மாபேட்டை அருகே தென்னை மரம் தலையில் விழுந்து பூசாரி மரணம்
அம்மாபேட்டை அருகே தென்னை மரம் தலையில் விழுந்ததில் பூசாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே பி.கே.பி.தோட்டம் பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தான தென்னை மரத்தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தை அம்மாபேட்டை அடுத்த சுந்தராம்பாளையத்தை சேர்ந்த சேட் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். அதில் சில தென்னை மரங்களை அறுக்க முடிவு செய்தார்.
இன்று அதற்கான பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர். அந்த தென்னை தோப்பையொட்டி அம்மாபேட்டை- செங்கோடு செல்லும் சாலை உள்ளது.
தென்னை மரம் அறுக்கும் பணியில் ஈடுபட்ட போது சுமார் 50 அடி நீளமுள்ள ஒரு தென்னை மரத்தை அறுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக செங்காடு ரோட்டில் பொட்டில் வந்த சுந்தராம்பாளையத்தை சேர்ந்த பூசாரி மாரியப்பன்(வயது55) என்பவர் தலை மீது தென்னை மரம் விழுந்தது.
இதில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த மாரியப்பன் மகன் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். இன்று ஊருக்கு வந்த தனது மகனை மொபட்டில் ஏற்றி கொண்டு வீட்டில் விட்டுவிட்டு வரும் வழியிலேயே இறந்துள்ளார்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே பி.கே.பி.தோட்டம் பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தான தென்னை மரத்தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தை அம்மாபேட்டை அடுத்த சுந்தராம்பாளையத்தை சேர்ந்த சேட் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். அதில் சில தென்னை மரங்களை அறுக்க முடிவு செய்தார்.
இன்று அதற்கான பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர். அந்த தென்னை தோப்பையொட்டி அம்மாபேட்டை- செங்கோடு செல்லும் சாலை உள்ளது.
தென்னை மரம் அறுக்கும் பணியில் ஈடுபட்ட போது சுமார் 50 அடி நீளமுள்ள ஒரு தென்னை மரத்தை அறுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக செங்காடு ரோட்டில் பொட்டில் வந்த சுந்தராம்பாளையத்தை சேர்ந்த பூசாரி மாரியப்பன்(வயது55) என்பவர் தலை மீது தென்னை மரம் விழுந்தது.
இதில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த மாரியப்பன் மகன் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். இன்று ஊருக்கு வந்த தனது மகனை மொபட்டில் ஏற்றி கொண்டு வீட்டில் விட்டுவிட்டு வரும் வழியிலேயே இறந்துள்ளார்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.