செய்திகள்

திருவொற்றியூரில் பா.ஜனதா சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

Published On 2017-07-06 07:28 IST   |   Update On 2017-07-06 07:28:00 IST
திருவொற்றியூர், பெரியார் நகரில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 4-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு பா.ஜனதா சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
திருவொற்றியூர்:

திருவொற்றியூர், பெரியார் நகரில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 4-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு பா.ஜனதா சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவுக்கு திருவள்ளூர் மாவட்ட பா.ஜனதா செயலாளர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். இதில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்தார்.

பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் உள்பட உதவி உபகரணங்களும், முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். 

Similar News